உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் நாளை முதல் அமல்

January 31, 2024

உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் இது நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்த உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் ஆனது ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது ஜனவரி முதல் டிசம்பர் வரை ஒவ்வொரு மாதமும் எந்த வட்டத்தில் நடத்த வேண்டும் என்ற திட்டமிடலை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்வர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. […]

உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் இது நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்த உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் ஆனது ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது ஜனவரி முதல் டிசம்பர் வரை ஒவ்வொரு மாதமும் எந்த வட்டத்தில் நடத்த வேண்டும் என்ற திட்டமிடலை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்வர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்திற்கான நெறிமுறைகளை தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டு அதற்கான நெறிமுறைகளை அறிவுறுத்தியுள்ளார். அதனை அடுத்து உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் படி முகாம் நடைபெறும் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உட்பட அனைத்து அதிகாரிகளும் 24 மணி நேரமும் தங்கி இருக்க வேண்டும். அங்கு கண்டறிந்த சாரம்சங்களை ஆவணமாக தயாரித்து வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த திட்ட முகாம் நடைபெறும் வட்டம் குறித்த தகவலை முன்கூட்டியே பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். சென்னை தவிர மீதமுள்ள மாவட்டங்களில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu