அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கான பாதுகாப்பு வசதிகள்: புதிய சிசிடிவி மற்றும் செக்யூரிட்டி ஏற்பாடுகள்

December 30, 2024

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகள் பாதுகாப்பு காரணமாக கூடுதல் காவலாளிகள், சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி மீது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மட்டும்தான் குற்றவாளி என போலீசார் மற்றும் அரசு தரப்பும் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் […]

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகள் பாதுகாப்பு காரணமாக கூடுதல் காவலாளிகள், சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி மீது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மட்டும்தான் குற்றவாளி என போலீசார் மற்றும் அரசு தரப்பும் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இதன் பின்னணியில், மாணவிகளின் நலனை பாதுகாக்க 16 பேராசிரியர்களைக் கொண்ட குழுவை அமைத்து, பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 140 காவலாளிகளுடன் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு, கூடுதலாக 40 காவலாளிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பழுதடைந்த சிசிடிவி கேமிராக்களை உடனடியாக சரி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாணவிகள் பாதுகாப்பிற்காக பல்கலைக்கழகத்தில் கூடுதலாக 30 சிசிடிவி கேமிராக்களை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu