காஷ்மீரில் பந்திபோராவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்தி போரோவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து அங்குள்ள சிந்திப்பந்தி கிராமத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் வீடு,வீடாக சென்று சோதனை நடத்தினர். அதில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து தாக்குதலில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். இதனால் அங்கு துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.