செங்கல்பட்டில் திருநங்கைகளுக்கு வீடு-கட்டும் பணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

April 29, 2022

28 April 2022, செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொடூர் ஊராட்சியில் சமூக நலன் மகளிர் உரிமைத் துறை மற்றும் மொபிஸ் இந்தியா பவுண்டேஷன் நிதியின் மூலம் திருநங்கைகளுக்கு வீடுகள் கட்டும் பணி தொடங்கியுள்ளது.

28 April 2022, செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொடூர் ஊராட்சியில் சமூக நலன் மகளிர் உரிமைத் துறை மற்றும் மொபிஸ் இந்தியா பவுண்டேஷன் நிதியின் மூலம் திருநங்கைகளுக்கு வீடுகள் கட்டும் பணி தொடங்கியுள்ளது.இந்தப் பணியை தொடங்கி வைக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், மொபிஸ் இந்தியா பவுண்டேஷன் பொது மேலாளர் ஜீ ஜியாங் கியு, மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா, செயற்பொறியாளர் கவிதா ஆகியோர் இந்நிகழ்ச்சி பங்கேற்று தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது,தமிழ்நாடு அரசு
திருநங்கைகளின் நலனின் அக்கறை கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் லத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொடூர் ஊராட்சியில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது‌‌ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த இடங்களில் திருநங்கைகளுக்கு வீடுகள் கட்டித்தர சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் மொபிஸ் இந்தியா பவுண்டேஷன் சமூக பொறுப்பு நிதியிருந்து தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் 50 வீடுகள் கட்டுவதற்காக திட்டமிடப்பட்டு பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.மேலும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

2
3
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu