மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதி சடங்கு நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகைசால் தமிழர் விருது பெற்ற அவருக்கு, அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று காலை 9.30 மணி அளவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவருக்கு வயது 102. இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற அவர், தனது வாழ்நாள் முழுவதும் பொதுவுடைமை வாதியாகவே வாழ்ந்து வந்தார். தமிழக இளைஞர்கள் பொதுவுடமை பாதையில் அடியெடுத்து வைப்பதற்கு சங்கரய்யா மிக முக்கிய காரணமாக இருந்தார். தமிழகத்தின் அரசியல் போக்கை இவரது பல்வேறு போராட்டங்கள் தீர்மானித்தது குறிப்பிடத்தக்கது.