பங்குச் சந்தையில் ஏற்றம் - சென்செக்ஸ் 340 புள்ளிகள் உயர்வு

July 6, 2023

தொடர்ந்து ஏற்றம் பெற்று வந்த இந்திய பங்குச்சந்தை, நேற்றைய தினம் ஏற்ற இறக்கமின்றி நிறைவடைந்தது. ஆனால், இன்று மீண்டும் தனது முன்னேற்ற பாதையை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 339.6 புள்ளிகள் உயர்ந்து 65785.64 புள்ளிகளில் பதிவாகியுள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 98.8 புள்ளிகள் உயர்ந்து, 19497.3 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, மஹிந்திரா, அப்பல்லோ […]

தொடர்ந்து ஏற்றம் பெற்று வந்த இந்திய பங்குச்சந்தை, நேற்றைய தினம் ஏற்ற இறக்கமின்றி நிறைவடைந்தது. ஆனால், இன்று மீண்டும் தனது முன்னேற்ற பாதையை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 339.6 புள்ளிகள் உயர்ந்து 65785.64 புள்ளிகளில் பதிவாகியுள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 98.8 புள்ளிகள் உயர்ந்து, 19497.3 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது.

தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, மஹிந்திரா, அப்பல்லோ ஹாஸ்பிடல், பவர் கிரிட், டாடா மோட்டார்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ், ஐ சி ஐ சி ஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவை ஏற்றமடைந்துள்ளன. அதே வேளையில், ஈச்சர் மோட்டார்ஸ், மாருதி சுசுகி, ஹச் சி எல் டெக், ஹெச்டிஎஃப்சி லைஃப், பஜாஜ் பைனான்ஸ், இண்டஸ் இன்ட் வங்கி ஆகியவை இறக்கமடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu