பங்குச் சந்தையில் தொடரும் ஏற்றம் - சென்செக்ஸ் 1618 புள்ளிகள் உயர்வு

June 7, 2024

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என மத்திய ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. அதன் எதிரொலியாக, இந்திய பங்குச்சந்தை இன்றும் உயர்வடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 1618.85 புள்ளிகள் உயர்ந்து 76693.36 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. இது சென்செக்ஸ் வரலாற்றில் புதிய உச்சம் ஆகும். அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 468.75 புள்ளிகள் உயர்ந்து 23290.15 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில், […]

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என மத்திய ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. அதன் எதிரொலியாக, இந்திய பங்குச்சந்தை இன்றும் உயர்வடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 1618.85 புள்ளிகள் உயர்ந்து 76693.36 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. இது சென்செக்ஸ் வரலாற்றில் புதிய உச்சம் ஆகும். அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 468.75 புள்ளிகள் உயர்ந்து 23290.15 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், மஹிந்திரா, விப்ரோ, டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ஏர்டெல், டாடா ஸ்டீல், பவர் கிரிட், ஐடிசி, என்டிபிசி, பாரத ஸ்டேட் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, எல் அண்ட் டி, பஜாஜ் பைனான்ஸ், ரிலையன்ஸ் போன்ற அனைத்து முக்கிய நிறுவனங்களும் ஏற்றம் பெற்றுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu