இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து 3 வது நாளாக ஏற்றம் பதிவாகியுள்ளது. அதன்படி, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை புதிய உச்சங்களை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 308.37 புள்ளிகள் உயர்ந்து 77301.14 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 92.31 புள்ளிகள் உயர்ந்து 23557.9 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், பங்கு வர்த்தக பட்டியலில் உள்ள பெரும்பாலான முக்கிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. எச்டிஎப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல், கொச்சின் ஷிப்யார்டு, ஜி எம் ஆர் இன்ஃப்ரா, வோடபோன், ஃபேக்ட், எம் எம் டி சி, ஷ்நீடர், ஜி ஆர் எஸ் இ, பவர் கிரிட் மற்றும் ஐடி நிறுவன பங்குகள் இதில் அடங்கும்.