இந்திய பங்குச்சந்தை இன்று வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளுமே புதிய உச்சத்தை அடைந்துள்ளன. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 712.44 புள்ளிகள் உயர்ந்து 78053.52 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 183.46 புள்ளிகள் உயர்ந்து 23721.3 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், அமர ராஜா பேட்டரி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஜொமாட்டோ, எஸ் வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல், எக்ஸைடு இண்டஸ்ட்ரி ஆகிய நிறுவனங்கள் ஏற்றமடைந்துள்ளன. சுஸ்லான் எனர்ஜி, வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன. பொதுவாக, இன்று வங்கித் துறை சார்ந்த பங்குகள் ஏற்றமடைந்ததாக கூறப்படுகிறது.