கடந்த 4 அமர்வுகளாக ஏற்றம் பெற்று வரும் இந்திய பங்குச் சந்தை, இன்றும் ஏற்றத்தை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்திலேயே ஏற்றம் பெற்று வந்த சென்செக்ஸ், கிட்டத்தட்ட 400 புள்ளிகள் வரை உயர்ந்தது. இறுதியில், இன்றைய வர்த்தக நேர முடிவில், 274 புள்ளிகள் உயர்ந்து 65479.05 புள்ளிகள் ஆக நிலை பெற்றுள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 66.45 புள்ளிகள் உயர்ந்து 19389 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஹீரோ மோட்டோகார்ப், டெக் மஹிந்திரா, சன் பார்மா, என் டி பி சி, டாக்டர் ரெட்டீஸ், டைட்டன், ஐ டி சி போன்ற நிறுவனங்கள் ஏற்றமடைந்துள்ளன. அதே வேளையில், ஈச்சர் மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல், ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ், ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனங்கள் இறக்கமடைந்துள்ளன.