இன்றைய வர்த்தக நாளில், பங்குச் சந்தை ஏற்றத்துடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 200 புள்ளிகள் வரை உயர்ந்து, 62748 ஆக இருந்தது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 50 புள்ளிகள் உயர்ந்து, 18650 ஆக இருந்தது.
உலகளாவிய முறையில் நிலவி வரும் பங்குச் சந்தையின் வலுவான சூழல் காரணமாக, இந்திய பங்குச் சந்தை ஏற்றத்தை சந்தித்துள்ளது. அனைத்து துறை நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் கண்டுள்ளன. குறிப்பாக, விப்ரோ, எல் அண்ட் டி, டாக்டர் ரெட்டிஸ், டாடா ஸ்டீல், ஏசியன் பெயிண்ட்ஸ், ஐடிசி, எம் அண்ட் எம், ஹெச் எப் டி, நெஸ்லே இந்தியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.














