தமிழ்நாட்டில் பெண்களுக்கென தனி பட்ஜெட் வேண்டும் என்று பேரவையில் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கோவை தெற்கு தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறுகையில், கோவையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசுடன் கலந்து பேச வேண்டும். குஜராத் மாநிலத்தில் இருப்பது போன்று தமிழ்நாட்டிலும் பெண்களுக்கு என்று தனி பட்ஜெட் நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான், தமிழகத்தில் பெண்களின் முன்னேற்றம் விரைவாக இருக்கும் என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன்: பாலினம் வாரியாக துறை சார்ந்த திட்டங்களின் பயனாளிகள் தொடர்பாக பூர்வாங்க கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது. விரைவில் அது வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.