பங்குச் சந்தையில், தொடர்ந்து 4வது நாளாக சரிவு போக்கு நீடித்து வருகிறது. இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 21.09 புள்ளைகளை இழந்துள்ளது. இறுதியில் 66009.15 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 68.1 புள்ளிகளை இழந்து 19674.25 புள்ளிகளாக உள்ளது.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, இண்டஸ் இண்ட் வங்கி, மாருதி சுசுகி, எஸ் பி ஐ, மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், டாக்டர் ரெட்டீஸ், விப்ரோ, சிப்லா, பஜாஜ் ஆட்டோ, டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி வங்கி, பவர் கிரிட், ஐ சி ஐ சி ஐ வங்கி, ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.