இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று ஏற்றம் பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 393.69 புள்ளிகள் உயர்ந்து 66473.05 புள்ளிகளாக உள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 121.5 புள்ளிகள் உயர்ந்து 19811.35 புள்ளிகள் ஆக உள்ளது.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்த வரை, ஹீரோ மோட்டோகார்ப், விப்ரோ, கிராஸிம், அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ், ஆக்சிஸ் வங்கி, என்டிபிசி, பவர் கிரிட் போன்ற நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், டாடா ஸ்டீல், எஸ் பி ஐ, கோல் இந்தியா, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், ஹெச் சி எல் டெக், அதானி போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.