இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து 5ம் நாளாக ஏற்றத்தில் முடிந்துள்ளது. இன்றைய நாளின் வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் சுமார் 809 புள்ளிகள் அதிகரித்து 81,765 புள்ளிகளாகவும், நிஃப்டி 241 புள்ளிகள் உயர்ந்து 24,708 புள்ளிகளாகவும் நிறைவடைந்துள்ளன.
வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் மற்றும் நவம்பர் மாத தொழில் துறை நடவடிக்கைகள் குறித்த நல்ல அறிக்கைகள் ஆகியவை இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகின்றன. இன்றைய நாளில், தொழில்நுட்பத் துறை, எண்ணெய் மற்றும் எரிவாயு, ஆட்டோமொபைல் மற்றும் உலோகத் துறைகள் நன்றாக செயல்பட்டன. டிசிஎஸ், இன்ஃபோசிஸ், டைட்டன் போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகள் 2%க்கும் அதிகமாக உயர்ந்தன. இருப்பினும், என்டிபிசி மற்றும் எஸ்பிஐ லைஃப் போன்ற சில நிறுவனங்களின் பங்குகள் சிறிது சரிவை சந்தித்தன. நிபுணர்களின் கணிப்பின்படி, நிஃப்டி விரைவில் 25,125 புள்ளிகளைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.