இன்று காலை முதல் ஏற்ற இறக்க பாதையில் பயணித்த பங்குச்சந்தை இறுதியில் சிறிய அளவிலான ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 89.64 புள்ளிகள் உயர்ந்து 72101.69 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 21.65 புள்ளிகள் உயர்ந்து 21839.1 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, ஈச்சர் மோட்டார்ஸ், மாருதி சுசுகி, பவர் கிரிட், நெஸ்லே, ஓஎன்ஜிசி, பாரத ஸ்டேட் வங்கி, பி பி சி எல், ஐடிசி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், டாடா ஸ்டீல், டாடா கன்சியூமர், டாடா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, சிப்லா, யு பி எல் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.