இந்திய பங்குச் சந்தை இன்று ஏற்ற இறக்கம் இன்றி நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 33.21 புள்ளிகள் உயர்ந்து, 64975.61 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. அதே நேரத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 36.8 புள்ளிகள் உயர்ந்து, 19443.5 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது.தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை, பிபிசிஎல், அதானி போர்ட்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், சிப்லா, டைட்டன், அதானி எண்டர்பிரைசஸ், எல் அண்ட் டி, எச் டி எஃப் சி வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ஓஎன்ஜிசி, ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், ஐசிஐசிஐ வங்கி, என்டிபிசி, இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, டாடா கன்சியூமர், எச்டிஎப்சி லைஃப், அப்போலோ ஹாஸ்பிடல், டாடா ஸ்டீல், கோட்டக் வங்கி, பஜாஜ் பைனான்ஸ் போன்ற நிறுவனங்கள் இறக்கமடைந்துள்ளன.