இந்திய பங்குச் சந்தையில் தொடர்ச்சியாக ஏற்றம் பதிவாகி வருகிறது. இன்றைய காலை நேர வர்த்தகத்தில் 400 புள்ளிகள் வரை உயர்ந்த மும்பை பங்குச் சந்தை, இறுதியில் 282 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 64363.78 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 19230.6 புள்ளிகளிலும் நிறைவு பெற்றுள்ளன.
இன்றைய வர்த்தகத்தில், அப்பல்லோ ஹாஸ்பிடல், அதானி போர்ட்ஸ், ஈச்சர் மோட்டார்ஸ், எல் டி ஐ மைண்ட் ட்ரீ, டைட்டன், ஜொமாட்டோ, ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், பாரத ஸ்டேட் வங்கி, ஐடிசி, பவர் கிரிட், ஓஎன்ஜிசி, யுபிஎல் போன்ற நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ், டாக்டர் ரெட்டிஸ், ஹெச் சி எல் டெக், டாடா ஸ்டீல், எஸ் பி ஐ லைப், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.