இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச் சந்தை ஏற்றம் பெற்றுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 591.69 புள்ளிகள் உயர்ந்து 81973.05 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 163.71 புள்ளிகள் உயர்ந்து 25127.95 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, ஐடிசி, இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ், ஜொமாட்டோ, எச்டிஎப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி போன்றவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், டிசிஎஸ், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், அதானி பவர், டாடா கெமிக்கல்ஸ், எஸ் வங்கி, பந்தன் வங்கி போன்றவை சரிவடைந்துள்ளன.