மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதன் விளைவாக, நேற்று இந்திய பங்குச்சந்தை வரலாற்று சரிவை பதிவு செய்தது. இன்று, மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியானதை அடுத்து, பங்குச் சந்தை உயர்வடைந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச ஒற்றை நாள் உயர்வாக நிஃப்டி பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 2303.19 புள்ளிகள் உயர்ந்து, 74382.24 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 735.85 புள்ளிகள் உயர்ந்து, 22620.35 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், அதானி போர்ட்ஸ், இண்டஸ் இண்ட் வங்கி, ஹிண்டால்கோ, ஹீரோ மோட்டோகார்ப், மஹிந்திரா, டாடா ஸ்டீல், அதானி எண்டர்பிரைசஸ், பாரத ஸ்டேட் வங்கி, என்டிபிசி, பவர் கிரிட், ஓஎன்ஜிசி, எச்டிஎப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, எல் அண்ட் டி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் போன்ற அநேக நிறுவனங்கள் உயர்ந்துள்ளன. மேலும், இந்திய பங்குச் சந்தையில் சிறப்பான பங்களிப்பை தரும் அனைத்து நிறுவனங்களும் உயர்ந்துள்ளன.