பங்குச் சந்தை ஏற்ற இறக்கமின்றி நிறைவு

September 25, 2023

கடந்த வாரத்தில் கடும் சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தை, இந்த வாரத்தின் தொடக்க நாளான இன்று, பெரிய மாற்றங்கள் இன்றி நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 14.54 புள்ளிகள் உயர்ந்து, 66023.69 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் வெறும் 0.3 புள்ளிகள் உயர்ந்துள்ளது. அதன்படி, 19674.5 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. இன்றைய வர்த்தக நாளின் இடையில் […]

கடந்த வாரத்தில் கடும் சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தை, இந்த வாரத்தின் தொடக்க நாளான இன்று, பெரிய மாற்றங்கள் இன்றி நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 14.54 புள்ளிகள் உயர்ந்து, 66023.69 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் வெறும் 0.3 புள்ளிகள் உயர்ந்துள்ளது. அதன்படி, 19674.5 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. இன்றைய வர்த்தக நாளின் இடையில் கிட்டத்தட்ட 200 புள்ளிகள் வரை சென்செக்ஸ் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, பஜாஜ் பைனான்ஸ், டாடா கன்சியூமர், அப்பல்லோ ஹாஸ்பிடல், பஜாஜ் பின்சர்வ், ஹெச் டி எப் சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, மாருதி சுசுகி, டாடா ஸ்டீல், கோல் இந்தியா, என்டிபிசி போன்ற நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே வேளையில், ஹிண்டால்கோ, எஸ் பி ஐ லைஃப், ஹீரோ மோட்டோகார்ப், டாக்டர் ரெட்டீஸ், பவர் கிரிட், எஸ் பி ஐ, ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu