தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். 2019-ல் முதல் தலைவராக கே.ஞானதேசிகன் நியமிக்கப்பட்டார், அவரது பதவிக்காலம் பிப்.10-ம் தேதி முடிந்தது. புதிய தலைவரை தேர்வு செய்யும் குழு, கடந்த ஜூலை மாதம் பரிந்துரை அளித்ததை தொடர்ந்து, தமிழக அரசு, ஆளுநரின் ஒப்புதலுடன் சிவ்தாஸ் மீனாவை நியமித்தது. 1989-ல் ஐஏஎஸ் அதிகாரியாக சேர்ந்த சிவ்தாஸ் மீனா, திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத் துறை செயலராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது, முதல்வரின் தனிசெயலாளராக உள்ள நா.முருகானந்தம், புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.