அமெரிக்காவில் 3 வெவ்வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டில் 3 வெவ்வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். பிலடெல்பியா, டெக்சாஸ், வால்டிபொர், பொர்ட் ஒர்த் ஆகிய 4 நகரங்களில் திங்கட்கிழமை முதல் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.