நிலவு மற்றும் செவ்வாய் கிரக ஆராய்ச்சி திட்டங்களை அறிவித்த தென் கொரியா

நிலவு மற்றும் செவ்வாய் கிரகங்களில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான விண்வெளி திட்டங்களை தென்கொரியா அறிவித்துள்ளது. அந்நாட்டின் அதிபர் யூன் சுக் இயோல், இனிமேல் மே 27ஆம் தேதி விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என அறிவித்து, நாட்டின் எதிர்கால விண்வெளித் திட்டங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டார். வரும் 2032-இல் நிலவுக்கு செயற்கைக்கோள் ஊர்தி அனுப்ப உள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. மேலும், 2045 ல் செவ்வாய் கிரகத்தில் தென்கொரிய நாட்டின் கொடியை நாட்ட உள்ளதாக கூறியுள்ளது. இதற்காக விண்வெளி துறை […]

நிலவு மற்றும் செவ்வாய் கிரகங்களில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான விண்வெளி திட்டங்களை தென்கொரியா அறிவித்துள்ளது. அந்நாட்டின் அதிபர் யூன் சுக் இயோல், இனிமேல் மே 27ஆம் தேதி விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என அறிவித்து, நாட்டின் எதிர்கால விண்வெளித் திட்டங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டார்.

வரும் 2032-இல் நிலவுக்கு செயற்கைக்கோள் ஊர்தி அனுப்ப உள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. மேலும், 2045 ல் செவ்வாய் கிரகத்தில் தென்கொரிய நாட்டின் கொடியை நாட்ட உள்ளதாக கூறியுள்ளது. இதற்காக விண்வெளி துறை பட்ஜெட்டை அதிகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், கொரிய தீபகற்பத்தை கண்காணிப்பதற்காக 2025க்குள் 5 உளவு செயற்கைக்கோள்களை நிறுவ திட்டமிட்டுள்ளது. வரும் 2030க்குள் இந்த எண்ணிக்கை 60 ஆக உயர்த்தப்படும் என கூறியுள்ளது. மேலும், சச்சியோன் என்ற பகுதியில் தென்கொரியாவின் புதிய விண்வெளி மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu