நேற்று, சூரியனைச் சுற்றி புதிய சுற்றுவட்ட பாதையில் பூமி அடி எடுத்து வைத்தது. அதன் போது, எடுக்கப்பட்ட சூரியனின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் மிகவும் அழகிய தோற்றத்துடன் சூரியன் காட்சியளிக்கிறது. சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணங்களின் கலவையாக சூரியன் தெரிகிறது.
சூரியனில் உள்ள ஆற்றல் மிகு கதிர்கள் புகைப்படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளன. இந்த கதிர்கள் மூலம் பூமியில் தொலைத்தொடர்பு சேவைகள் மிகவும் பாதிக்கப்படும் என நாசா கூறியுள்ளது. நாசா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "93 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள சூரியன் 4.5 பில்லியன் வருடங்கள் பழமையானதாகும். நமது சூரிய குடும்பத்தின் நிகழ்வுகள் அனைத்திற்கும் சூரியனே முதன்மை காரணம்" என தெரிவித்துள்ளது. மேலும், நாசாவின் பிரத்தியேக விண்கலம் சூரியனை ஆராய்ச்சி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.