நாட்டில் உள்ள ஒரு கோடி வீடுகளில் சூரிய மின் உற்பத்தி தகடுகளை பொருத்தும் புதிய திட்டம் தொடங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி நாட்டில் உள்ள ஒரு கோடி வீடுகளில் சூரிய மின் தகடுகளை ஏற்படுத்தும் புதிய திட்டத்தை தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது வலைதள பக்கத்தில் அயோத்தியில் இருந்து திரும்பியவுடன் "பிரதமரின் சூரிய உதய திட்டம்" என்ற புதிய திட்டத்தை தொடங்குவது குறித்தான முதல் முடிவை எடுத்துள்ளேன். இத்திட்டம் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் செலுத்தும் மின் கட்டணத்தை குறைப்பதுடன் எரிசக்தி துறையில் இந்தியா சார்பு நிலை அடைவதற்கும் உதவுகிறது என தெரிவித்துள்ளார்.














