புதன்கிழமை அன்று, அதிதீவிர சூரிய புயலில் இருந்து பூமி மயிரிழையில் தப்பித்தது. ஆனால், வியாழனன்று, சூரியனில் புதிதாக உருவான கரும்புள்ளி வெடித்து சிதறி, M3 ரக சூரிய புயலை வெளியேற்றியது. பூமியை நோக்கி வந்த இது, இந்து மகா சமுத்திரத்தை நேரடியாக தாக்கியுள்ளது. இந்தியா, இலங்கை, வங்கதேசம், சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் இந்த சூரிய புயலின் பாதிப்புகளை உணர்ந்தன. இந்தப் புயல் காரணமாக, குறுகிய அலை ரேடியோ தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டன.
சூரிய புயல் இந்து மகா சமுத்திரத்தை தாக்குவது மிகவும் அரிதான நிகழ்வாகும். கடந்த 2 ஆண்டுகளில் இது முதல் நிகழ்வாக சொல்லப்பட்டுள்ளது. இந்தப் புயல் தாக்கிய போது, 30 மெகா ஹெர்ட்ஸ் அளவுகளுக்கு கீழான தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. எனவே, ட்ரோன்கள் முதல் ஜிபிஎஸ் சேவைகள் வரை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.