மலேசியாவின் கெடா மாகாண கடற்பகுதியில் படகில் இருந்த 200 அகதிகளை போலீசார் கைது செய்தனர்.
மலேசியாவின் அண்டை நாடுகளான மியான்மர் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து ஏராளமானோர் சட்ட விரோதமாக மலேசியாவுக்கு நுழைகின்றனர். சமீப காலமாக இந்த எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், இதனை கட்டுப்படுத்த மலேசியா அரசாங்கம் எல்லை பகுதியின் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், கெடா மாகாண கடற்பகுதியில் அகதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதற்கிணங்க, கடலோர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அகதிகளை ஏற்றிக் கொண்டு 2 படகுகள் கடலுக்கு செல்லும் போது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர், படகில் இருந்த 200 அகதிகளை போலீசார் கைது செய்தனர்.