தென்கொரியா தனது எல்லைப் பகுதியில் வடகொரியாவுக்கு எதிரான பிரச்சார ஒலிபெருக்கியை அமைத்துள்ளது.
வடகொரியா சமீப காலமாக தென்கொரிய தீபகற்பத்தில் அடிக்கடி அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. சமீபத்தில் நூற்றுக்கணக்கான குப்பைகள் அடங்கிய பலூன்களை தென்கொரிய எல்லையில் வடகொரியா பறக்க விட்டது. இதன் மூலம் குப்பைகளை தென்கொரிய எல்லையில் கொட்டியது. இதனால் கோபம் அடைந்த தென்கொரியா 2018ல் போடப்பட்ட வடகொரியா உடனான ராணுவ ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இதனையடுத்து தென்கொரியா தனது எல்லைப் பகுதியில் வடகொரியாவுக்கு எதிரான பிரச்சார ஒலிபெருக்கியை அமைத்துள்ளது. அதன் மூலம் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளது. இதில் தென்கொரிய பாடல்கள் ஒளிபரப்பப்படும். அதோடு தென்கொரிய எல்லையில் வடகொரியாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய சுமார் 2 லட்சம் துண்டு சீட்டுகள் பறக்க விடப்பட உள்ளது.