தென்கொரியா - ஜப்பான் தலைவர்கள் சந்திப்பு - ஏவுகணை சோதனை நடத்தி வடகொரியா எதிர்ப்பு

March 16, 2023

தென்கொரிய அதிபர் யூன் சூக் இயொல், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை இன்று சந்தித்தார். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு, இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு நடந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு சர்ச்சைகள் காரணமாக, தலைவர்களின் சந்திப்பு நிறுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, இருநாட்டு உறவில் புதிய அத்தியாயமாக இந்த சந்திப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தென்கொரியா, “இருநாட்டு உறவில் இது முக்கிய மைல்கல்” என்று கூறியுள்ளது. தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைவது வடகொரியாவுக்கு […]

தென்கொரிய அதிபர் யூன் சூக் இயொல், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை இன்று சந்தித்தார். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு, இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு நடந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு சர்ச்சைகள் காரணமாக, தலைவர்களின் சந்திப்பு நிறுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, இருநாட்டு உறவில் புதிய அத்தியாயமாக இந்த சந்திப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தென்கொரியா, “இருநாட்டு உறவில் இது முக்கிய மைல்கல்” என்று கூறியுள்ளது.

தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைவது வடகொரியாவுக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. எனவே, இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு நிகழ்வதற்கு ஒரு சில மணி நேரம் முன்னதாக, வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தி தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இந்த ஏவுகணை சோதனை கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் நடத்தப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், இத்துடன் சேர்த்து, வட கொரியா 4வது முறையாக கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனையை ஓராண்டிற்குள் நிகழ்த்தியுள்ளது. வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu