தென்கொரியாவில் வரும் ஜூன் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
தென்கொரியாவில் ராணுவ அவசர நிலையை செயல்படுத்தியதற்காக, அந்நாட்டின் அதிபர் யூன் சுக்-இயோ எதிர்ப்பு போராட்டங்களுக்குள்ளானார். இதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், அவர் பதவி நீக்கப்பட்டார். கடந்த வாரம் அரசியலமைப்பு நீதிமன்றமும் இந்த தீர்மானத்தை உறுதி செய்தது.
தென்கொரிய அரசியலமைப்பின்படி, அதிபர் பதவி நீக்கப்பட்டால், 2 மாதத்துக்குள் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டியது கட்டாயம். இதனையடுத்து, இடைக்கால அதிபர் ஹான் டக்-சூ, வரும் ஜூன் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார்.