உலகப் புகழ்பெற்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், தனது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தொகுப்பை மேலும் விரிவுபடுத்தும் வகையில், டிசம்பர் 8 ஆம் தேதி மதியம் 12:12 மணிக்கு EST-ல், புளோரிடாவின் கேப் கேனவெரல் ஏவுதளத்தில் இருந்து 23 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
இந்த முறை செலுத்தப்பட்ட 23 செயற்கைக்கோள்களில் 13 செயற்கைக்கோள்கள் நேரடியாக செல்போன்களுக்கு இணைய சேவையை வழங்கும் சிறப்பு அம்சத்துடன் கூடியவை. இந்த செயற்கைக்கோள்களை சுமந்து சென்ற பால்கன் 9 ராக்கெட்டின் முதல் நிலை, அட்லாண்டிக் பெருங்கடலில் நிறுத்தப்பட்டிருந்த "எ ஷார்ட்ஃபால் ஆஃப் கிராவிடாஸ்" என்ற ட்ரோன் கப்பலில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இது பால்கன் 9 ராக்கெட்டின் இரண்டாவது முறை பயன்பாடு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இது 2024-ம் ஆண்டில் ஸ்பேஸ் எக்ஸ் மேற்கொண்ட 123-வது ராக்கெட் ஏவுதல் ஆகும்.