நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்கள் இணைந்து, வரும் அக்டோபர் 5ம் தேதி விண்கல் திட்டத்தை செயல்படுத்துகின்றன.
Psyche விண்கல்லை ஆராய்வதற்காக அதே பெயருடைய திட்டத்தில், நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றன. இந்த திட்டம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளது. ஃப்ளோரிடாவில் உள்ள கென்னடி ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து அக்டோபர் 5ம் தேதி இது ஏவப்பட உள்ளது. பொதுவாக, விண்கற்களில் அதிக அளவு உலோகங்கள் உள்ளதால், அதனை ஆராய்ச்சி செய்வது மூலம், பூமியின் தோற்றம் குறித்து அறிவதற்கு உதவியாக இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனை முதன்மையாகக் கொண்டு இந்த விண்கல் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.