வெள்ளத்தால் இழந்த அரசு சான்றிதழ்களை திரும்ப பெற சென்னையில் நாளை 46 இடங்களில் முகாம் அமைக்கப்பட உள்ளது.
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பிறப்பு, இறப்பு, ஜாதி, இருப்பிடம், வாரிசு, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அரசு சான்றிதழ்களை இழந்தவர்கள் அதனை கட்டணம் இன்றி திரும்பப் பெரும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதன் அடிப்படையில் நாளை அனைத்து மண்டலங்களிலும் சிறப்பு முகாம்கள் தினந்தோறும் காலை 10 மணி முதல் 5 மணி வரை நடத்தப்பட்டுள்ளது. அதன்படி திருவொற்றியூர், மணலி, புழல், மாதவரம்,அம்பத்தூர், பாடி, அண்ணாநகர், கீழ்பாக்கம், மயிலாப்பூர், தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், தி.நகர், போரூர், வேளச்சேரி, அடையாறு, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை உட்பட்ட 46 பகுதி அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நாளை நடைபெற உள்ளது.