வார விடுமுறை மற்றும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
சனி, ஞாயிறு மற்றும் பக்ரீத் பண்டிகையை தொடர்ந்து தொடர் விடுமுறை நாள்களில் தாம்பரம் நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரத்தில் இருந்து இன்று இரவு புறப்படும் சிறப்பு ரயிலானது மறுநாள் காலை நாகர்கோவிலை சென்றடையும். அதேபோன்று மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து நாளை பிற்பகல் புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் தாம்பரம் வந்தடைகிறது. இதேபோன்று ஞாயிற்றுக்கிழமையும் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு நாகர்கோவிலுக்கும், பின்னர் மறுமார்க்கமாக நாகூர் கோவிலில் இருந்து 17ஆம் தேதி புறப்பட்டு தாம்பரத்தையும் சென்றடைகிறது