சா்ச்சைக்குரிய இணையதளச் சட்டத்திற்கு இலங்கை நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
இலங்கையில் இணையதள பதிவுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் சர்ச்சைக்குரிய சட்டத்துக்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து நாடாளுமன்ற அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்படுவதாவது, இணையதள பாதுகாப்பு சட்டத்துக்கு அவை தலைவர் மஹிந்த யாப்பா அபே வர்த்தன ஒப்புதல் அளித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சட்டம் கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக உள்ளது என்று இலங்கையிலும் சர்வதேச அளவிலும் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இருந்த போதிலும் கடந்த வாரம் அந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. அதற்கு இப்போது அவை தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.