சென்னை - ஷீரடி இடையே எஸ்ஆர்எம்பிஆர் நிறுவனத்தின் முதல் ரயில் சேவை தொடக்கம்

April 28, 2023

சென்னை - ஷீரடி இடையே எஸ்ஆர்எம்பிஆர் நிறுவனத்தின் முதல் ரயில் சேவையை பாரிவேந்தர் தொடங்கி வைத்தார். பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ், எஸ்ஆர்எம்பிஆர் குளோபல் ரயில்வேஸ் நிறுவனம், நாடு முழுவதும் உள்ள ஆன்மிகத் தலங்கள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு 4 ரயில்களை இயக்குகிறது. அந்த வகையில், எஸ்ஆர்எம்பிஆர் குளோபல் ரயில்வேஸ் நிறுவனத்தின் முதல் ரயில் சேவை நேற்று தொடங்கியது. சென்னை எழும்பூரில் இருந்து ஷீரடிக்கு ரயில்சேவையை பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர், எஸ்ஆர்எம் குழுமத்தலைவர் ரவி பச்சமுத்து […]

சென்னை - ஷீரடி இடையே எஸ்ஆர்எம்பிஆர் நிறுவனத்தின் முதல் ரயில் சேவையை பாரிவேந்தர் தொடங்கி வைத்தார்.

பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ், எஸ்ஆர்எம்பிஆர் குளோபல் ரயில்வேஸ் நிறுவனம், நாடு முழுவதும் உள்ள ஆன்மிகத் தலங்கள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு 4 ரயில்களை இயக்குகிறது. அந்த வகையில், எஸ்ஆர்எம்பிஆர் குளோபல் ரயில்வேஸ் நிறுவனத்தின் முதல் ரயில் சேவை நேற்று தொடங்கியது. சென்னை எழும்பூரில் இருந்து ஷீரடிக்கு ரயில்சேவையை பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர், எஸ்ஆர்எம் குழுமத்தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த ரயிலில் முதல் வகுப்பு ஏசி, 2 அடுக்கு ஏசி, 3 அடுக்கு ஏசிஆகியவற்றில் தலா 3 பெட்டிகள், ஒரு 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி உள்ளிட்ட 14 பெட்டிகள் உள்ளன. முதல் ரயில் பயணத்தில் 580 பயணிகள், 120 ஊழியர்கள் என 700 பேர் பங்கேற்றனர். இந்த ரயிலில் பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் இலவச வைஃபை, சிசிடிவி கேமரா உள்ளிட்டவையும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu