அதிநவீன 'மர்மகோவா' போர்க்கப்பல் கடற்படையில் நாளை சேர்ப்பு

December 17, 2022

அதிநவீன 'மர்மகோவா' போர்க்கப்பல் கடற்படையில் நாளை சேர்க்கப்படவுள்ளது. இந்திய கடற்படைக்கு ஐ.என்.எஸ். மர்மகோவா என்ற அதிநவீன நாசகார போர்க்கப்பல் முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்துக் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கப்பலின் நீளம் 163 மீட்டர், அகலம் 17 மீட்டர். முழுமையான கொள்ளளவில் இதன் எடை 7,400 டன் ஆகும். இந்த கப்பல், அணு ஆயுதங்கள், உயிரி ஆயுதங்கள், ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் போர் நிலைமைகளில் போரிடுவதற்கு ஏற்ற வகையில் அதிநவீன கண்காணிப்பு ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ரேடார்கள், துப்பாக்கி இலக்கு […]

அதிநவீன 'மர்மகோவா' போர்க்கப்பல் கடற்படையில் நாளை சேர்க்கப்படவுள்ளது.

இந்திய கடற்படைக்கு ஐ.என்.எஸ். மர்மகோவா என்ற அதிநவீன நாசகார போர்க்கப்பல் முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்துக் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கப்பலின் நீளம் 163 மீட்டர், அகலம் 17 மீட்டர். முழுமையான கொள்ளளவில் இதன் எடை 7,400 டன் ஆகும். இந்த கப்பல், அணு ஆயுதங்கள், உயிரி ஆயுதங்கள், ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் போர் நிலைமைகளில் போரிடுவதற்கு ஏற்ற வகையில் அதிநவீன கண்காணிப்பு ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ரேடார்கள், துப்பாக்கி இலக்கு அமைப்புகளுக்கு இலக்கு தரவுகளை வழங்கும்.

இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 30 கடல்மைல் ஆகும். இந்த அதிநவீன நாசகார போர்க்கப்பல், இந்திய கடற்படையில் நாளை முறைப்படி இணைகிறது. இந்தக் கப்பல், இந்தியக் கடற்படையில் இணைவதால் இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு வலு அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu