இந்த வாரத்தின் தொடக்க நாளான இன்று, இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 329.85 புள்ளிகள் உயர்ந்து, 64112.65 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி, குறியீட்டு எண் 93.66 புள்ளிகள் உயர்ந்து, 19140.9 புள்ளிகள் ஆக உள்ளது.
ரிலையன்ஸ் மற்றும் அதானி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள், இன்றைய ஏற்றத்தில் மிக முக்கிய பங்கு வகித்ததாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய வர்த்தகத்தில், ரிலையன்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், பிபிசிஎல், அல்ட்ராடெக் சிமெண்ட், ஓஎன்ஜிசி, சிப்லா, எஸ் பி ஐ லைப், பாரத ஸ்டேட் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், யூபிஎல், டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி, பஜாஜ் ஆட்டோ, ஈச்சர் மோட்டார்ஸ், பிரிட்டானியா, ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல், என் டி பி சி போன்றவை சரிவை சந்தித்துள்ளன.