இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில் கெரீட் புயல் தாக்கி வருகிறது.
இங்கிலாந்தின் சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. ரயில்கள் மற்றும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மணிக்கு என்பது மைல் வேகத்தில் காற்று வீசுவதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான அலுவலகங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. சுமார் 100க்கும் அதிகமான வீடுகளில் இருந்து மக்கள் பாதுகாப்பு காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹீ த்ரு விமான நிலையம் 18 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.














