சூடானில் 3 நாட்களில் 200 பேர் படுகொலை

February 19, 2025

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில், துணை ராணுவப் படையான ஆர்.எஸ்.எப் கடந்த 3 நாட்களில் 200 பேரை படுகொலை செய்துள்ளது என்று உள்நாட்டுப் போரை கண்காணிக்கும் வழக்குரைஞர்கள் குழு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. தெற்கு சூடானில் உள்ள அல்-கடாரிஸ், அல்-கேல்வட் கிராமங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்கிய பலரை துப்பாக்கியால் சுட்டும், நைல் நதி வழியாக தப்பியோட முயன்றபோது மூழ்கடித்தும் கொலை செய்ததாக கூறப்படுகிறது. 2023 ஏப்ரல் 15 முதல், அல்-புர்ஹான் தலைமையிலான ராணுவத்திற்கும், முகமது ஹம்தான் டகாலோ […]

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில், துணை ராணுவப் படையான ஆர்.எஸ்.எப் கடந்த 3 நாட்களில் 200 பேரை படுகொலை செய்துள்ளது என்று உள்நாட்டுப் போரை கண்காணிக்கும் வழக்குரைஞர்கள் குழு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. தெற்கு சூடானில் உள்ள அல்-கடாரிஸ், அல்-கேல்வட் கிராமங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்கிய பலரை துப்பாக்கியால் சுட்டும், நைல் நதி வழியாக தப்பியோட முயன்றபோது மூழ்கடித்தும் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

2023 ஏப்ரல் 15 முதல், அல்-புர்ஹான் தலைமையிலான ராணுவத்திற்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்.எஸ்.எப். துணை ராணுவத்திற்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக மோதல் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 1.5 லட்சம் முதல் 5.2 லட்சம் பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சர்வதேச நாடுகள் சமரச முயற்சிகளை மேற்கொண்டு வரினும், இதுவரை எந்த ஒரு முயற்சியும் வெற்றி பெறவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu