ஒன்பது லட்சம் விண்ணப்பதாரர்கள் எழுதிய நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
தேசிய தேர்வு முகமைகள் சார்பில் ஜூன், டிசம்பர் இரண்டு கணினி வழியில் நெட் தேர்வு நடத்தப்படும். இது நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகையை பெறுவதற்கும் இந்த நெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நாடு முழுவதும் ஜூன் மாதம் பருவத்திற்கான முதல் கட்ட நெட் தேர்வு நடத்தப்பட்டது. அதில் 317 நகரங்களில் 1205 மையங்களில் மொத்தம் ஒன்பது லட்சத்தி 8,580 பேர் இந்த தேர்வு எழுதினர். இந்நிலையில் நேற்று இரவு மத்திய கல்வி அமைச்சகம், தேர்வு செயல்முறையின் வெளிப்படை தன்மையை உறுதி செய்வதற்காக நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் புதிய தேர்வு நடத்துவது குறித்து அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது