இந்துக்கஷ் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியா, சீனா,நேபாளம் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.
டெல்லி மற்றும் தெற்கு டெல்லி பகுதியில் நேற்று பிற்பகல் 2.51 மணி அளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மக்கள் தங்கள் வீடு, அலுவலகம் விட்டு வெளியேறினார். மக்கள் அச்சமடையத் தேவையில்லை என போலீசார் கேட்டுக் கொண்டனர். இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசான அதிர்வை ஏற்படுத்தின. அதேபோல் நேபாளத்திலும் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது பிற்பகல் 2.25 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகளில் 4.6 அளவுகளாகவும், அதைத்தொடர்ந்து பிற்பகல் 2.51 மணிக்கு 6.2 ஆகவும் பதிவாகியுள்ளது.