இந்திய பெருங்கடல் பகுதியில் சுகோய் போர் விமானம் ரோந்து

இந்திய பெருங்கடல் பகுதியில் சுகோய் போர் விமானம் 8 மணி நேரம் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. உலகின் கடல்சார் வர்த்தகத்தில் 25 சதவீதம் இந்த நீரிணை வழியாக நடைபெறுகிறது. ஆண்டுதோறும் 50,000-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மலாக்கா நீரிணை வழியாக கடந்து செல்கின்றன. குறிப்பாக சீனாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 80 சதவீதம் மலாக்கா நீரிணை வழியாக நடைபெறுகிறது. தைவான் மீது சீன ராணுவம் தாக்குதல் நடத்த தயங்குவதற்கு மலாக்கா நீரிணை மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில் […]

இந்திய பெருங்கடல் பகுதியில் சுகோய் போர் விமானம் 8 மணி நேரம் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது.

உலகின் கடல்சார் வர்த்தகத்தில் 25 சதவீதம் இந்த நீரிணை வழியாக நடைபெறுகிறது. ஆண்டுதோறும் 50,000-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மலாக்கா நீரிணை வழியாக கடந்து செல்கின்றன. குறிப்பாக சீனாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 80 சதவீதம் மலாக்கா நீரிணை வழியாக நடைபெறுகிறது. தைவான் மீது சீன ராணுவம் தாக்குதல் நடத்த தயங்குவதற்கு மலாக்கா நீரிணை மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் சீனாவின் ஆதிக்கம், அச்சுறுத்தல்களை முறியடிக்க இந்திய பெருங்கடல் பகுதியில் இந்திய விமானப் படையின் ரஃபேல் மற்றும் சுகோய் ரக விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து இந்திய விமானப் படையின் சுகோய் ரகத்தை சேர்ந்த எஸ்.யு.30 எம்கேஐ ரக போர் விமானம் இந்திய பெருங்கடல் பகுதியில் தொடர்ச்சியாக 8 மணி நேரம் ரோந்து பணியில் ஈடுபட்டு புதிய சாதனை படைத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu