சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் மார்ச் 12-ல் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது.
போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்துடன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்வெளி பயணம் மேற்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், தொழில்நுட்ப கோளாறுகளால் 6 மாதமாக விண்வெளியில் சிக்கி தவிக்கின்றனர். நாசா, அவர்களுக்கு எதுவும் ஆகவில்லை என்றும், அவர்கள் விரைவில் பூமிக்கு திரும்புவார்கள் என்று தெரிவித்துள்ளது. ஸ்பேஸ் எக்ஸின் ராக்கெட் மூலம் மார்ச் 12-ம் தேதி அவர்களை பூமிக்கு மீட்டுக் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.