2025 பிப்ரவரியில் பூமி திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ் - நாசா அறிவிப்பு

போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கிக்கொண்டுள்ளனர். இதனால் நாசா கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது. முதலில் 8 நாட்கள் மட்டுமே ISS-ல் பணியாற்ற திட்டமிடப்பட்டிருந்த இவர்கள், தற்போது அங்கிருந்து திரும்புவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை சமாளிக்க, வரும் 2025 பிப்ரவரியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ 9 திட்டத்தின் மூலம் இவர்களை மீட்டு வருவதற்கான […]

போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கிக்கொண்டுள்ளனர். இதனால் நாசா கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது. முதலில் 8 நாட்கள் மட்டுமே ISS-ல் பணியாற்ற திட்டமிடப்பட்டிருந்த இவர்கள், தற்போது அங்கிருந்து திரும்புவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை சமாளிக்க, வரும் 2025 பிப்ரவரியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ 9 திட்டத்தின் மூலம் இவர்களை மீட்டு வருவதற்கான வாய்ப்பை நாசா ஆராய்ந்து வருகிறது. இவ்வாறு நீண்ட காலம் விண்வெளி நிலையத்தில் தங்கியிருப்பது, ISS-இல் உள்ள வளங்களை அதிகமாக பயன்படுத்தி, அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஸ்டார்லைனர் விண்கலத்தை மீண்டும் பயன்படுத்த விரும்பினாலும், நாசா பிற மாற்று வழிகளையும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இந்த விவகாரத்தில் வரும் வாரங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu