நாசாவின் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இரண்டாவது முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ISS) தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார். இவர் 2012-ம் ஆண்டு எக்ஸ்பெடிஷன் 33-க்கு தலைமை தாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஜூன் 5, 2024 அன்று ISS-க்கு சென்றனர். ஆரம்பத்தில் 8 நாட்கள் மட்டுமே இங்கு தங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறுகளால் அவர்களின் திரும்பும் பயணம் பிப்ரவரி 2025 வரை தள்ளிப்போனது. தற்போது, ரஷ்ய விண்வெளி வீரர் ஓலெக் கொனோனென்கோவிடம் இருந்து ISS தலைமைப் பொறுப்பை சுனிதா வில்லியம்ஸ் ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும், அதிக விண்வெளி நடைகளை மேற்கொண்ட பெண் என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.