கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில், சூரியனில் தென்பட்ட சூரிய புள்ளிகளின் எண்ணிக்கை 163 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 21 வருடங்களில் பதிவாகியுள்ள உச்சபட்ச எண்ணிக்கை ஆகும். இது சூரியனில் நிகழும் 25 வது கால சுழற்சியின் தாக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற சூரியனின் 24 ஆம் கால சுழற்சியை விட, 25 ஆம் சுழற்சி ஆற்றல் குறைந்ததாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், தற்போது சூரியனில் நிகழும் மாற்றங்கள், இந்த 25ம் சுழற்சி, ஹாரிங்டன் நிகழ்வை பூமியில் மீண்டும் ஏற்படுத்த வல்ல சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 6 மாதத்தில், குறிப்பாக ஜூன் மாதத்தில், அதிக எண்ணிக்கையிலான சூரிய புள்ளிகள் தோன்றியுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். எனவே, கடந்த 1859 ஆம் ஆண்டு நிகழ்ந்ததைப் போல, இந்த ஆண்டும் மிகப்பெரிய சூரிய புயல் பாதிப்பு பூமிக்கு நேரலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.