வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு தடைவிதிக்க கூடாது உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்குவதற்கு தடை விதிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வெளி மாநில பதிவு எண்களைக் கொண்ட ஏராளமான ஆம்னி பேருந்துகள், அகில இந்திய சுற்றுலா அனுமதி சீட்டு பெற்று இயங்கி வருகின்றன. இந்த பேருந்துகள் பயணிகளுக்கான ஆம்னி பேருந்துகள் போலவே இயக்கப்பட்டு வருகின்றன. அதில் தமிழகத்தில் 652 பேருந்துகள் அனுமதி இன்றி இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு […]

தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்குவதற்கு தடை விதிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வெளி மாநில பதிவு எண்களைக் கொண்ட ஏராளமான ஆம்னி பேருந்துகள், அகில இந்திய சுற்றுலா அனுமதி சீட்டு பெற்று இயங்கி வருகின்றன. இந்த பேருந்துகள் பயணிகளுக்கான ஆம்னி பேருந்துகள் போலவே இயக்கப்பட்டு வருகின்றன. அதில் தமிழகத்தில் 652 பேருந்துகள் அனுமதி இன்றி இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. பின்னர் தமிழகத்தில் இயக்கப்படும் ஆம்னி பேருந்து உரிய அனுமதி பெற்று இயங்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் 547 பேருந்துகள் தமிழகத்தின் வாகன பதிவு எண்ணை பெறாமலே இயங்கி வருகின்றன. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழக பதிவு எண் மற்றும் அனுமதி சீட்டு பெறாமல் இயங்கக்கூடாது என போக்குவரத்து துறை தடை விதித்தது. இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தமிழக அரசின் உத்தரவால் வெளிமாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாக வாதம் செய்யப்பட்டது. இதனை அடுத்து தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்குவதை தடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu