பஞ்சு மிட்டாய்களில் கலக்கப்படும் ரசாயனம் காரணமாக குடலில் ஆறாத புண்கள் ஏற்பட்டு புற்றுநோயாக மாறும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது.
பஞ்சு மிட்டாய்களில் கலக்கப்படும் ரசாயனம் குடலில் ஆறாத புண்களை ஏற்படுத்தி புற்றுநோயாக மாறும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. மேலும் சிறுநீர் பிரச்சினைகளை தாண்டி மூளை செயலிழக்கும் அபாயமும் உள்ளது. இந்த வகை உணவு பொருட்கள் உடலுக்கு கேடு விளைவிக்கிறது. எனவே இதை சாப்பிட வேண்டாம் என உணவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனடிப்படையில் தமிழக அரசு உத்தரவின் பேரில் பஞ்சுமிட்டாய் வைக்கப்படும் பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பலத்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.